பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蕊 விஞ்ஞானச் சிக்கல்கள்

அவனுக்கும் அச்சம்! நாம் போய் அதை விசாரணை செய்தால் நிலைமை என்னவாகுமோ! என்ற உணர்வோடு, அது பிணமா? குடி மயக்க மனிதனா? என்ற சந்தேகத்தால் அதையே பின்

என்னதான்் நடக்கிறது என்று கருதி, அந்த உடல் போகும் இடமெல்லாம் பின்சென்று துப்பறிந்த படியே வந்தான்்.

இரவெல்லாம் அந்த பிணம், ஒவ்வொருவர் மீதாகச் சாய்ந்து - சாய்ந்து சுற்றியவாறே - சுழன்று சுழன்று வந்தது.

குடி போதையில் ஒர் அப்சரசியிடம் கைகோர்த்து நடனமாடிக் கொண்டிருந்த சீமான் ஒருவனிடம் எதிர்பாராமல், திடீரென்று அந்த பிணம் அவனது கைகளிலே வந்து சாய்ந்தது!

'மறுபடியுமா..! என்னிடமே வந்து விட்டாயா?.” என்று, ஒங்கி ஒர் அறை அறைந்தான்் சவத்தை! போதையல்லவா..!

சாய்ந்தது கீழே சவம்' ஓடினான் அடித்தவன்! போலிஸ்காரன் அவனைத் தடுத்து நிறுத்தினான்.

திருவிழாவிலே ஒரே இரைச்சல் போலீசார் ஒடியவனைக் கைது செய்து விசாரித்தார்கள்,

சவமானவன் ஒரு விஞ்ஞானி அறிவியலில் ஒரு புதிய கண்டுபிடிப்பைக் கண்டு பிடித்தான்்.

அவன் கண்டு பிடித்த சாதனையின் விதிகளைப் பெரிய நிறுவனம் ஒன்றிற்கு விலைக்கு வாங்கித் தருவதாக அவனிடம் அடிக்கடி வியாபாரம்