பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 口7 'எழுத்துலக வரலாற்றில், இன்றுவரை, இத்தகையதொரு பரபரப்பூட்டும் எந்த சம்பவமும் நடந்ததாகத் தெரியவில்லையே!” என்ற பதில்தான்் பெற்றார்கள் அமைச்சர்கள்.

'அதற்கான ஆதாரங்களைத் தேடுங்கள்: ஒடுங்கள்” என்று அமைச்சர்கள் - அறிஞர்களை விரட்டினார்கள்.

ஆண்டுகள் ஐந்து, ஆணையைப் போலல்ல, பூனையைப் போல மிரண்ட விழிகளுடன் ஒடின! அமைச்சர்கள் அனைவரும் மீண்டும் கூடினார்கள் - அரண்மனையிலே - மிக மிக அச்சத்தோடே!

'வேந்தர் வேந்தே தங்களது வேட்கையை அரும்பாடுபட்டு நாங்கள் நிறைவேற்றி விட்டோம்”

"அதோ அந்த பலகணி வழியாகப் பாருங்கள்” 'எதை நீங்கள் விரும்பினர்களோ அதைப் பெறுவீர்கள்” என்றனர் அமைச்சர்கள் ஒரே குரலில்: நோக்கினான் கொற்றவன் - சன்னல் வழியாக! மறுபடியும் பார்த்தான்் - மீண்டும் மீண்டும் கண்டான்!

ஏதோ, ஒரே ஒட்டகங்கள் மயமானதொரு காட்சி அவன் கண்களுக்குத் தெரிந்தது. அவ்வளவுதான்்!

அதனால் ஒன்றுமே புரியவில்லை அவனுக்கு! நன்றாகத் தேய்த்துக் கொண்டே கண்களோடு மறுபடியும் பார்த்தான்்!

வியப்பு எழ மீண்டும் மீண்டும் கவனித்தான்். எப்படி நோக்கினும் காட்சி ஒன்றுதான்ே!