பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



க. கட்டபொம்மன்
[திருச்சிற்றம்பலக் கவிராயர்]
1

தாயகத்தின் விடுதலைக்காய்த் தலைகொடுத்துப் புகழ்காத்த
நாயகரைப் போற்றிசெய் நல்லதொரு கவியரங்கைக்
கூட்டுவித்த வானொலியே! கூடிவந்த நல்லவரே!
பாட்டுச் சுவைபடைக்கும் பாவலரே! அவைத்தலைவ!
அவைத்தலைவர் முன்னிலையில் அரங்கேறும் கவிதைகளைச்
செவிமடுத்துக் கேட்டுவக்கும் செந்தமிழ்நன் னாட்டோரே!

உமக்கெல்லாம்———
சிற்றம் பலத்தான்யான் செய்தேன் பல வணக்கம்;
மற்றினியான் கட்டபொம்மன் வரலாற்று மகத்துவத்தைப்
பற்றிச் சிலவார்த்தை பகரத் தொடங்குகிறேன்.

இற்றைத் தினத்துக்கு இருநூறு ஆண்டுகட்குச்
சற்றேறக் குறைவான சமயத்தே, நம்மருமைப்
பாரதமாம் இந்நாட்டில் பாராண்ட மன்னவர்கள்
வேரதிரத் தமக்குள்ளே வேண்டாப் பகைவளர்த்து,
சூழ்ச்சி பலவிளைத்து, சோதரரைச் சோதரரே
வீழ்ச்சியுறச் செய்துவந்த வெய்யதொரு வினைப்பயனால்,
ஆறா யிரம்மைல்கட் கப்பால் இருந்துவந்த
சோரர்குலம் இந்நாட்டைச் சூழ்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும்
ஆளாக்கி நம்மையெலாம் அடிமைகொண்ட அந்நாளில்
தோளுயர்த்தித் தாயகத்தின் சுதந்தரத்தைக்
காப்பதற்காய்