இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இலக்கண இலக்கியம் 41
என்பது பொருள். மருமகளாக் கொண்டு மணுட்டுப்புறம் செய்யுங்கொலோ’ என்பது பெரியாழ்வார் திருவாக்கு.
- 165. அமுதம், அமிழ்தம், அமிர்தம்-இவற்றுள் சரியான
சொல் யாது ? - ... ." -
- அம்ருதம் என்ற வடசொல்லின் திரிபு இவை. மூன்றும்
சரியே
- 166. வெயில், வெய்யில்-இந்த இரண்டில் எது சரி :
- வெயில் என்பது இலக்கிய வழக்கு; 'என்பி லதனை
வெயில்போலக் காயுமே, அன்பி லதனை அறம்' என்பது குறள். வெய்யில் என்பது உலக வழக்கு. செய்யுளில் உலக வழக்கையும் சிறுபான்மை ஆள்வதனால், வெய்யிற் கேற்ற நிழலுண்டு என்று பாடியவர்களும் உண்டு.
- 167. ராணி என்பதும் அரசாணி என்பதும் ஒரேபொருளை
உடைய சொற்களா ? அவை எப்படி வந்தன ?
- ராஜ்ஞீ என்பது ராஜா என்பதன் பெண்பால். அதுவே
ராணி என்று வந்தது. ராஜா என்பது அரசன் என்று வந்ததுபோல, ராஜ்ஞீ என்பது அரசாணி என்று வந்தது. இரண்டும் ஒரே பொருளையுடைய சொற்களே. -
- 168. சுறுசுறுப்பு, சுருசுருப்பு-இரண்டையும் எழுதுகிருர்
களே; எது சரி ? -
- இரண்டும் சரியே. ஆலுைம் சுறுசுறுப்பு என்ற சொல்
லின் ஒலியிலே சுறுசுறுப்பு இருப்பதனால் அதை வழங்குவது சிறப்பு. -
- 169. பருந்துகழு கென்று பகர்வர்தமிழ் மக்கள்
இருந்தஇவை ஒன்ரு இரண்டா ?-விரும் தாகத், தப்பிதமில் கட்டுரைகள் தந்த விடைய வனே, செப்புமின் கல்விடையைத் தேர்ந்து.
- விடை-4