பக்கம்:விதியின் நாயகி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 தபாலிலேயே எதிர் நோக்கித் தவம் கிடக்கிறேன். எல்லாம் பூர் பிரஹதீஸ்வரர் துணை, தங்கள் அடியாள், அபர்ணு.’’ சுழித்த சுடுநீரை மெல்ல வருடிப் போக்கடித்தான் அழகேசன். அக்கணமே, அவன் அவசரத் தந்தி ஒன்றை அனுப்பினுன்: 'உன் எண்ணம் எதுவோ அதையே என் கடமையாகவும் ஏற்கச் சித்தமாயிருக்கிறேன். அழகேசன், ’’ இளம்பருவத் தடம் ஒன்று. அழகேசன் எலிமெண்டரி ஸ்கூலில் படித்தான். வகுப்புத் தோழி அபர்ணு. அருகருகான இடம். அபர்ணுவின் குடும் பம் பசையுடன் வாழ்ந்த காலம். அழகேசனுக்கோ புதுப் 'புத்தகங்கள் வாங்குவதற்குக்கூட இயலாமை, தடங்கல். இரண்டு நாள் சேர்ந்த மாதிரி புத்தகங்கள் வாங்கப்படாத தால், அவன் பெஞ்சியின்மேல் ஏற்றப்பட்டான். அவனுடன் அபர்ணுவும் அந்தக் கதிக்கு உள்ளாளுள். மறுதினம், அவ னுக்கு உண்மையின் இரு வேறு கிளைகளின் தாத்பரியம் புரிந்: தது. அவனுக்கும் சேர்த்துப் பாடப்புத்தகங்கள் அனைத்தை யும் அவள் வாங்கி வந்தாள். முதல் நாளில், அவனுக்காகவே தான், தன் புதிய புத்தகங்களை மறைத்துவிட்டு, அவனுடன் பெஞ்சியில் ஏறி நின்ருள். இது பரம ரகசியமாம்! தஞ்சை, எல்லையம்மன் கோவில் தெருவில் நடந்த, நிகழ்ச்சி இது. கனவின் கனவாக-அன்பின் அன்பாக-இச்சம் பவம் அதனுள்ளே வாழ்ந்து, அவனே வாழவைத்த கதையை அவன்தான் அறிவான்! புயலில் சிக்கிய தளிராக, அபர்ணு வின் குடும்பம் காலவினைக்கு உடந்தையாகித் தவித்துத் தடு மாறிய கதையை அவளே அறியமுடியும்!