பக்கம்:விதியின் நாயகி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i44 இறைமைச் சக்தியின் தலைமையின் கீழ், ஹோமத்தி முன்மொழிய, கொட்டுமேளம் வழிமொழிய, வாழ்ந்து காட்டியவர்களின் முன்னிலையிலே, சிரஞ்சீவி அழகேசன் செளாக்கியவதி அபர்ணுவுக்குத் திருப்பூட்டினன். - ஆண்மையும் பெண்மையும் அதனதன் அளவில்-அதன தன் போக்கில் முழுமை பெற்றன. இருவரும் உடலும் உயிரும் ஒன்று கலந்த பண்பாட்டில், காலம் பண் பாடிப் அறந்தது. அழகேசனுக்கு அந்த ஒரு காட்சி பசுமை தட்டித் திகழ்ந்தது. கையிலேந்திய மங்கலநானுடன், நாணம் பூத்த மணம் கமழ் மலராக-ரோஜாப் பூவாக, குனிந்த தலை நிமிராமல், நிமிர்ந்த பெருநோக்குப் பாசம்-அன்பு குனியாமல் வீற்றிருந்த மணப்பந்தல் கொலுப்பதுமையை ஜாடை சேர்த்துப் பார்த்திடத் தவித்த நேரத்தில், அவனது கண் விரிப்பில் அது சமயம் தாரிணி தட்டுப்படுவாள், கண் கட்டு மாயம் செய்வாள், தாளையடிப் பயிர் உதிர்க்கும் நெல்மணிகளாய் தன் நினைவுகள் சிதறுமென்று அவன் கணித்திருக்கவா முடியும்? இல்லை, அந்தப் பெண் தாரணியின் அந்த ஒரு சொட்டுக் கண்ணிரின் பொருளே மாற்றுரைத்துச் சோதிக்கத்தான் அவன் சாகலம் பயின்றவனு?... காதலின் கதையில் கண்ணிரின் கறை இருக்கத்தான் செய்யும். கண்ணிரின் கறையில் காதலின் கரை தென்படாமல் இருப் பதும் நியதிக்கு முரண்பட்ட கோட்பாடல்லவே! என்னவோ, காதல்!... என்னவோ, வாழ்க்கை!... விளையும் ஆசாபாசங் களையும்-நொறுங்கிச் சிதறும் ஆசாபாசங்களையும் நம்பித் தான் உலகம் உருள்கிறது! - - அடிக்கடி அழகேசன் எண்ணமிடுவது இயல்பு: தாரணி தங்கமான பெண். அவள் விரும்புகின்ற நல்ல மாப்பிள்ளை யாகப் பார்த்துத் திருமணம் முடித்து வைத்தால்தான் எனக்கு அமைதி பூக்கும்!...” --"