பக்கம்:விதியின் நாயகி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 அவரது தந்தையின் டாக்கீஸ் கட்டடம் கை கொடுத்தது. அதற்கு அவர் தோள் கொடுத்தார். மெய்கண்டான் தியேட்டர் உருவாயிற்று. மார்க்கெட்டிலே காய்கறியிலிருந்து இறைச்சி வரை வாங்கும் பொது ஜனங்கள் சகலத்தனை பேர்களும், அந்தச் சினிமாக் கொட்டகையை ஒரு தரம் நின்று முறைத்துப் பார்த்து விட்டுப் போகாமல் இருந்ததில்லை; இருக்கவும் மாட்டார்கள். இதற்குக் கா ர ன ம் என்னவென்று தெரியுமா? ه ه** يو ه د ه ، fgiيي. அந்தத் தியேட்டரின் வெளி முகப்பில், உண்மையே தெய்வம்; வாய்மையே வாழ்வு!’ என்ற வாசகங்கள். பிரக தீசுவரர் கோயில் கலசம் போல் துலாம்பரமாகப் பளிச் சிட்டன. இம்மாதிரியான உபதேசங்களை வாழ வைத்து, அதன் மூலம் தாமும் வாழ எண்ணியவர் பிள்ளைவாள். உண்மையைச் சோதித்துப் பார்க்கும் அளவுக்குத் துணிச்சல் பெற்றவர் பிள்ளை. பொய்களுடனே புழுங்கி வந்த சகடயோகத்தை அழைத்துக் காப்பி வாங்கிக் கொடுத்து, அவரையே மானேஜராக்கி, அதன்பிறகு தாம் எழுதிய மணிவாசங்களின் மணியோசையைக் கேட்கச்செய்த துணிச்சல் பேர்வழி ஆயிற்றே அவர் வாரம் ஒருமுறை வந்து தஞ்சையில் தங்கி, சகடயோகத்தையும், சகடயோகத் தின் பால் தொடர்பு பூண்ட உண்மை-பொய்ப் படலத்தின் திகழ்ச்சிகளையும் பரிசோதனை செய்து திரும்புவது முதலாளி பின் வழக்கம். சகடயோகம் இருக்கிருரே அவருக்குக் காசுதான் குறி: -- கரசுதான் கடவுள்! அதற்காக, அவர் சட்டத்தின் பேரில் கைவைக்க முடியவில்லை. தமாஷ் வரி கூடிய டிக்கெட்டுப் புத்தகங்களில் 'தமாஷ் பண்ண முடியவில்லை. அவர் பொறுப்பில் நடந்த பெட்டிக்கடையிலும், கான்டி னிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/68&oldid=476478" இலிருந்து மீள்விக்கப்பட்டது