பக்கம்:விதியின் நாயகி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ 05 கை வைத்தார். காம்ப்ளிமெண்டரி டிக்கெட் வழங்கி பெரிய மனிதர்களின் அன்புக்குப் பாத்திரமானர். அதன் பலகை, ரகசிய உதவிகள் கிடைக்கப் பெற்ருர் சட்டம் நாற்புறமும் காவல் புரிந்து கொண்டிருக்க, ஆண்டவன் ஒருருவாக உண்மையின் வடிவாகச் சிரித்து நிற்க, ஆஜானு பாகுவாக நிமிர்ந்து நின்று கொண்டிருந்த அந்தத் தியேட் டரின் ரகசிய அறையில் அன்பர் சகடயோகம் சட்டத்தை உடைக்கும் வகையில் மதுப்புட்டிகளை உடைத்து வந்த சம்பவங்கள், அவருக்கு வேண்டப்படாதவர்களால் துரது அனுப்பப்பட்டு, அவை பிள்ளைவாளின் தன்மானம் மிக்க உணர்வுகளைச் சுண்டியிழுத்தன......! மெய்கண்ட பிள்ளை முகப்பில் தொங்கிய உண்மை விளக்கப் படங்களை எடுத்துக் கொண்டு வந்து, உள்ளே மானேஜர் அறையில் தொங்கவிட்டார். சகடயோகத்தைக் கூப்பிட்டனுப்பினர். அவர் வந்தார். அவருடன் கூட, அந்தச் சிறுவனும் வந்தான். அவன் அவருக்கு எடுபிடி ஆள். தியேட்டருக்குச் சொந்தக்காரர் அந்தப் பொடியனைப் பார்த்தார். ஆழமான பார்வை அது! பைய யாரு?" தெக்குச் சீமைப் பயலுங்க. பேரு சங்கிலி, கை சுத்தம் ஜாஸ்தியுங்க, முதலாளி...!!?? முதலாளியின் அந்தரங்க மேடையில் அமைந்திட்ட குற்றவாளிக் கூண்டில் தான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துப்பு அல்லது ரகசியம், அல்லது உண்மையை அறிந்து கொள்ள சகடயோகத்துக்கு வயசு போதாது ! டேலே...!” காவற்காரன் வந்தான்; பவ்யமாகக் கைகட்டி நின்ருன், எங்கேடா நம்ப பயல்...???

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/69&oldid=476479" இலிருந்து மீள்விக்கப்பட்டது