பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

14 விந்தன 'ராயல் ஒட்டல் சில நாள்களிலேயே மூடுவிழா கண்டு கோவிந்தனை முழுமையாக விழுங்கியது முதல் முயற்சியிலேயே தோல்வி கண்ட மனிதர் அடுத்து என்ன செய்வது என்று யோசிபபதற்குள் மனைவியும் குழந்தையும் அம்மை நோய்க்கு ஆளாகிப் பாயும் படுக்கையுமானார்கள் என்றும் தன் கையே தனக்கு உதவி என்றும் நம்பிக்கையோடு வாழ்ந்தவர் வேதனையால் மனம் உடைந்து நோயுற்ற மனைவியையும் குழந்தையையும் பொன்னேரியில் உள்ள தன் மாமனார் வீட்டில் விட்டு விட்டுக் கையில் காசு ஏதும் இல்லாமல் நெஞ்சில் சுமையோடு கால் போன போக்கில் நடந்தார் போன வழி புதிய வழி என்றாலும் நாலு பேர் நடந்து நைந்த வழி என்பதால் நடந்த வழியே நல்ல வழி என்று தொடர்ந்தார் நடைதளர்ந்து நின்ற வழி ஆண்ட நவாபுகள் அழிந்து பரமபக்கிரிகள் வாழும் வேலூர் என்று அறிந்து வேதனையை மறந்தார் வேலூரில் சில உறவினர்கள் உண்டு என்பதைவிட இந்த ஊர் அச்சகங்கள் நிறைந்த ஊர் என்பதாலேயே அவருக்கு நிம்மதி கிடைத்தது வேலூரில் சில மாதங்கள் தங்கி விக்டோரியா பிரசில் வேலை பார்த்தபோது மனைவியையும் குழந்தையையும் பார்க்க ஆசை கொண்டு, கூடவே நண்பன் நினைவு வரவே நண்பர் இராஜாபாதருக்கு கடிதம் எழுதினார் நண்பனிடம் இருந்து நல்ல பதில் வரவே சென்னைக்குத் திரும்பினார் 1941-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் நாள் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் எதிரில் உள்ள வசந்த விகாரை அடுத்துள்ள கட்டடத்தில் இருந்து 'கல்கி முதல் இதழை வெளியிட்ட கல்கி நிறுவனத்தார் சில மாதங்களுக்குள் கீழ் பாக்கத்தில் சொந்தமாக வாங்கிய பழைய கட்டடம் ஒன்றில் மாறினர் கல்கி-யின் மேல் பக்தியும் அவர் எழுத்தில் மதிப்பும் வைத்திருந்த டி எம் இராஜாபாதர் பேரில் கல்கியும் அன்பு வைத்திருந்தார் அந்த செல்வாக்கினால் தான் கோவிந்தனை கல்கி அச்சகத்தில் அச்சுக் கோர்ப்பாளராகச் சேர்த்தார் கல்கி தீபாவளி மலர் ஒன்றுக்கு பேராசிரியர் கல்கி அவசர அவசரமாக எழுதிய வீணை பவானி என்ற நீண்ட சிறுகதையை, எனக்கும் கடவுளுக்கும் தான் புரியும் என்று சொன்ன கல்கியின் கையெழுத்தை, கோவிந்தன் ஒர் எழுத்துகூட பிழையில்லாமல் அச்சுக்கோர்த்து ஆசிரியரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் ஒருநாள் பேராசிரியர் கல்கி இந்த விவகாரத்தை இராஜாபாதரிடம்