பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சிறு கதைகள் 31 பங்களாவுக்கு காவல் காக்க வைத்துக் கொண்டார்" (எஸ் தோத்தாத்ரி தாமரை 1978) சமூக விரோதிகள் 'விந்தனுடைய கதைகளில் புதுமைப்பித்தனை விட மிக அதிகமான அளவிற்கு ஒரு சத்திய ஆவேசமும் சமுதாய உணர்வும் இருப்பதைக் காண முடியும் சமுதாய விரோதி' என்ற கதை இதுவும் மிகச் சிறந்த உதாரணம் சொந்தத் தகப்பனாராக இருந்தாலும் கள்ளச் சாராயம் காய்ச்சுகிறான் என்றபடியால் அவனைப் போலீஸ் வசம் ஒப்படைக்கும் புஷ்பராஜி கதை இது புஷ்பராஜிக்கு ஏற்படும் தர்மாவேசம் விபீஷ்ணனுக்கு ஏற்படும் ஆவேசத்தைப் போன்றது நியாயம் நிலை நாட்டப்பட வேண்டும் சமூக விரோதிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் மிக உறுதியான கதாபாத்திரமாக புஷ்பராஜ் விளங்குகின்றான் இங்கு புஷ்பராஜ் அதர்மத்தை எதிர்த்துப் போராடும் ஒரு இதிகாசத்தின் தன்மையுள்ள பாத்திரமாக விளங்குவதைக் காண முடிகிறது. புஷ்பராஜிக்கு வேறு ஒருவருக்கும் நிகழும் உரையாடல் இதைத் தெளிவாக உணர்த்துகிறது "அவர் எனக்கு விரோதியில்லை” "பின்னே யாருக்குத் தம்பி விரோதி?" 'சமூகத்துக்கு விரோதி" "சொந்த அப்பனைவிடச் சமுதாயம் பெரிதா?” 'அப்பனைவிட அரசாங்கத்தைவிடப் பெரிது' (சமுதாய விரோதி) இந்த வரிசையில் உள்ள பல கதைகளை விந்தன் எழுதி யுள்ளார் சமுதாயத்தை ஏமாற்றித் திரியும் ஒரு கதாபாத்திரமாக எங்கள் ஏகாம்பரம் என்ற கதையில் ஏகாம்பரம் என்ற பாத்திரம் இடம் பெற்றுள்ளது. காந்தியவாதி என்ற கதையில் இன்று உலவி வரும் போலி காந்தியவாதியை விந்தன் அம்லப்படுத்துகிறார் 'காந்தியவாதி' என்ற அவருடைய கதையில் கதாநாயகன் துளசிங்க ராயர் ஊர்க் குழந்தைகளுக்குப் பட்டாசு தானம் செய்கிறேன் என்று அவருடைய வைப்பாட்டி குழந்தைகளுக்குக் கொடுக்கிறார் அத்தனை வைப்பாட்டிகள் அவருக்கு அவருடைய சுயரூபத்தை குப்புலிங்கம் என்ற கதாபாத்திரம் மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் விந்தன் 'நான் எட்டிப் பார்த்தேன் என்ன ஆச்சரியம் ஏழெட்டுப் பெண்களுக்கு நடுவே எங்கள் ஊர் காந்தி எழுந்தருளியிருந்தார் மேலே ஒரு துண்டும் கீழே ஒரு துண்டும் வழக்கமாக இருக்கும் பாருங்கள், அவற்றைகூட மறந்து அவர் எளிமையின் உச்சிக்கே போய்