பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாவல்கள் 75 பார்சலில் அனுப்பிவிட்டு, கடிதம் எழுதிக் கடற்கரையில் வைத்து விட்டுக் கடலில் குதித்து விடுகிறாள் கடற்கரையில் கடிதத்தைக் கண்ட மணியும், மோகனும் அருணாவைத தேடுவதில் தீவிரமாக இருக்கின்றனர் எதிர்பாராத விதமாக உயிர் தப்பிய அருணாவை மோகனின் அலுவலக அதிகாரி காப்பாற்றுகிறார், அடைக்கலம் தருகிறார், திருமணம் ஆகாத அவர் அருணாவைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார் 'பணத்தாசையால் மகளைப் பறிகொடுதது விட்டோமே என்று ஆபத்சகாயம் மனம் வருந்தியபோது, சுகாநந்தர் இறந்து விட்டார் எனற செய்தி கேட்டுப் பதறுகிறார் அதோடு சுகாநநதர் இயற்கையாக இறந்து இருக்கமாட்டார். அவர் மகன்தான் அவரைக் கொன்றிருப்பான்' என்னும் முடிவோடு நண்பருக்கு இறுதி மரியாதை செலுத்தச செல்கிறார் ஆபத்சகாயம் அங்கே, எல்லோரையும கண்டு அழுதது போல ஆபத் சகாயத்தையும் கண்டவுடன் அழுகிறான் சுந்தர் அவனது அழுகையைக் கண்டு மனம் நெகிழாத ஆபத்சகாயம் அவனைத் தனியே அழைத்து 'உண்மையைச் சொல் நீதானே அவரை நஞ்சிட்டுக் கொன்றாய்?" என்று அவன் குரல் வளையைப் பிடித்து ஓர் உலுக்கு உலுக்கியபோது, அவன் உண்மையைச் சொல்ல மறுத்த போதிலும் அடுத்த கணம் அவர் காலடியில் நூறு ரூபாய் நோட்டுகளை வைத்து 'எனனைக் காப்பாற்றுங்கள்' என்று அழுகிறான்; அவர் பழைய ஆபத்சகாயம் என்கிற நினைப்பில் ஆனால், அவர் முன்னாள் பொறுப்புள்ள ஒரு போலீஸ் அதிகாரி என்பதைப் புரியவைக்கும் வகையில் பணத்தைக் தொடமறுத்ததைக் கண்டு திடுக்கிட்டு, அவரைத் தீர்த்துக்கட்ட சுந்தர் துப்பாக்கியைப் பயன்படுத்துகையில், அங்கு அவர் ஏற்கெனவே செய்து வைத்திருந்த ஏற்பாட்டின்படி போலீஸார் வந்து சுந்தரைக் கைது செய்கின்றனர் தன் வாழ்நாளிலேயே முதன் முறையாகச் செய்த ஒரே ஒரு நல்ல காரியத்தை - அதாவது சுந்தரைப் பிடித்துப் போலீசாரிடம் ஒப்படைத்ததை நினைத்து ஆபத்சகாயம் ஆனந்தப் பட்டுக் கொண்டிருந்தபோது, 'மன்னிக்க வேண்டும்' என்று தயக்கத்துடன் மணி உள்ளே நுழைய அவனுக்குப் பின்னால் சொக்கலிங்கனார், மீனாட்சியம்மாள், இராதா, பார்வதி தம்பதிகள், பரந்தாமனின் தாயார் ஆகியோர் வந்து கொண்டிருக்க, "வாழ்த்துங்கள்' என்று சொல்லாமல் - வெளியில் சொல்லாமல் மனத்தால் சொல்லிக் கொண்டு பரந்தாமனும் அருணாவும் மோகனும் - பாமாவும் வந்து கொண்டிருந்தனர்