பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 விந்தன் இலக்கியத் தடம் பற்றிக் கதைகள் எழுதும்போது அவர்கள் வர்ணிக்கும் நடை, உடை பாவனைகள் அவ்வளவு சரியாயிருப்பதில்லை. மிக்க சிரமம் எடுத்துக் கவனித்து எழுதினாலும் சில சமயம் ' ராபனா என்று குட்டை உடைக்கும்படியாகத் தவறுகள் நேர்ந்துவிடும். இன்னொரு அபாயமும் அதில் ஏற்படுவதாயிற்று. கதை என்றால், அதில் நல்ல பாத்திரங்களும் வருவார்கள், துஷ்ட பாத்திரங்களும் வருவார்கள். பிராமனர்களைப் பற்றி யார் என்ன எழுதினாலும் அதைப்பற்றிச் சாதாரணமாக ஆட்சேபம் ஏற்படுவதில்லை. அவர்களை என்ன பாடுபடுத்தி எப்படி வதைத்து எழுதினாலும் கேள்வி முறையிராது. ஒரு பிராமண கதாபாத்திரத்தைத் தலை மொட்டையடித்துக் கழுதைமேலேற்றி வைத்து ஊர்வலம் விட்டால், கதை படிப்பவர்களில் சிலர் அரு வருப்படைவார்கள்; சிலர் சிரிப்பார்கள். ஆனால் யாரும் சண்டைக்கு வரமாட்டார்கள். ஆனால் ஒரு செங்குந்தரையோ, ஒரு வன்னிய குலத்தாரையோ, ஒரு கவுண்டரையோ, ஒரு விசுவ குலத்தாரையோ, ஒரு அரிஜன சகோதரரையோ கதையில் பொல்லாதவனாகச் செய்திருந்தாலும் பரிகாசம் செய்திருந்தாலும் வந்தது மோசம்; அந்தக் குலத்தைச் சேர்ந்தவர்கள் கதையைப் படிக்க நேர்ந்துவிட்டால் ஆசிரியரோடு துவந்த யுத்தம் செய்ய வந்துவிடுவார்கள். இதன் காரணமாக மற்ற சாதிகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள்கூடத் தத்தம் சமூகக் குடும்ப வாழ்க்கைகளைப் பற்றிக் கதை எழுதத் தயங்கிப் பிராமணத் தமிழில் பிராமணக் குடும்பங்களைப்பற்றிக் கதைகள் எழுதினார்கள்! அதெல்லாம் ஒரு காலம். அந்தக் காலம் போய், தமிழ்நாட்டு இலக்கிய உலகத்தில் சாதிப் பிரச்னை ஒருவாறு தொலைந்தது. எந்தச் சாதியைப் பற்றியும் பயமில்லாமல் கதை எழுதலாம் என்ற நிலைமை ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் நவயுக மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் தோன்றினார்கள். ருவியக் கதைகளையும் மற்ற மேனாட்டுக் கதைகளையும் படித்தார்கள். அந்தக் கதைகளைப் போல் இந்த நாட்டு ஏழை எளியவர்களையும் உழைப்பாளி மக்களையும் பற்றிக் கதை எழுதத் தொடங்கினார்கள்.