இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நாத்தனார்
105
கங்கம்மா.
இதைப் படித்ததும், “வஞ்சி! இப்பவே நீயும் என்னுடன் புறப்பட வேண்டியதுதான்!” என்று துள்ளிக் குதித்தான் கந்தசாமி. அவனுடைய தோள்களை ஆசையுடன் பிடித்துத் தொங்கிக் கொண்டு, “ஏன், அந்தக் கடிதாசியிலே அப்படி என்ன எழுதியிருக்கு?” என்று கேட்டாள் வஞ்சி.
விஷயத்தைச் சொன்னான் கந்தசாமி. அதைக் கேட்ட வஞ்சியின் வதனம், காலதேவனைக் கண்ட கமலம் போல் பூத்தது!
இந்தக் காட்சி எந்த நாத்தனாருக்கும் பிடிக்காத காட்சிதான்; ஆனால் ஏன் பிடிக்கவில்லை என்றுதான் தெரியவில்லை!