பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

155

விந்தன் கதைகள்

"அதுகூடக் கேட்டுப் பார்த்தேன் இத்தனை வருசமா உனக்கு நான் வேலை கொடுத்து ஆதரிச்சதற்கு நீதாண்டா எனக்கு ஏதாச்சும் கொடுத்துவிட்டுப் போவணும் என்கிறானே" என்றார் அவர்.

குழந்தை மணிக்கு அப்பாவைப் பார்த்த பிறகு அங்கே நிற்கவே மனமில்லை. 'குதி, குதி' என்று குதித்துக் கொண்டே அவன் வாசலுக்கு ஓடி வந்தான். அவனுக்கு எதிரே அவன் எதிர்பார்த்தபடி சங்கரும் வந்து கொண்டிருந்தான். "டேய் சங்கர் என் அப்பா வந்துட்டாருடா இனிமே நான் உன்னைப் போலவே சினிமாவுக்கு, ஹோட்டலுக்கு, பீச்சுக்கு-எல்லாம் போவேன், தெரியுமா!" என்று அவன் சங்கரிடம் பெருமையடித்துக் கொண்டான்.