இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பத்தினித் தெய்வம்
83
விடியற்காலை மூன்று மணி இருக்கும். சாத்தப்பன் வந்து கதவைத் திறந்தான்; பலாத்காரம் படுதோல்வி அடைந்திருப்பதைக் கண்டான்; ஏனெனில் முத்தம்மா அவனை வரவேற்கவில்லை. அவளுடைய உயிரற்ற உடல் தான் அவனை வரவேற்றது. அதைக் கண்டதும் அவனுடைய உள்ளம் பதைபதைத்தது. “முத்தம்மா!” என்று அழைக்க வாயெடுத்தான்; வார்த்தை வெளிவரவில்லை.
தூக்குக் கயிற்றைப்போல் துக்கம் அவனுடைய துணிந்த நெஞ்சை இறுக்கிவிட்டது போலும்!
அடுத்த நிமிடம் ‘அக்கூ!’ என்று ஆந்தையின் அழுகுரல். அங்கே நிலவியிருந்த பயங்கரமான நிசப்தத்தைக் கலைத்தது.