அன்பும் அருளும்
401
பதிலைக் கேட்டுத் தினசரி ஏமாந்து சென்றவர்களில் மேற்படி ஏழைச் சிறுமியும் ஒருத்தி.
ஒரு நாள் என்னையுமறியாமல் அந்தச் சிறுமியிடம் எனக்கு அனுதாபம் உண்டாயிற்று. வழக்கம்போல் அன்றும் 'இல்லை' என்று சொல்லும் கட்டம் வந்தபோது, அவளை மட்டும் நான் இருக்கும்படி சமிக்ஞை செய்தேன். குறிப்பறிந்து அவளும் என்னுடைய அழைப்பை எதிர்பார்த்து நின்றாள்.
மல் கிடைத்தவர்கள், கிடைக்காதவர்கள் எல்லாரும் கடையை விட்டுச் சென்ற பிறகு அந்தச் சிறுமியை அழைத்து, "உன் பெயர் என்ன, அம்மா?"என்று விசாரித்தேன்.
"நீலி!” என்றாள் அவள்.
"எடுத்ததற்கெல்லாம் அழுவாயோ?”
"இல்லை; என் பெயர் நீலா. அம்மா 'நீலி, நீலி'என்று தான் என்னைக் கூப்பிடுவாள்!"
"எங்கே இருக்கிறாய்?"
"ஓடைத் தெரு, ஒன்பதாம் நெம்பர் வீட்டில்!”
"உனக்கு எத்தனை கெஜம் மல் வேண்டும்?"
"ஆறு கெஜம்."
"ஐயோ, அத்தனை கெஜமா!"
"ஆமாம்; அக்காவுக்குப் புடவைக்காக!"
"ஏன், வேறு ஏதாவது புடவையாகவே வாங்கிக் கொள்ளக் கூடாதா?"
"எப்படி வாங்க முடியும்? ஆறு கெஜம் மல்லுக்காக அக்கா மூன்றரை ரூபாய்தான் கொடுத்தனுப்பியிருக்கா. அவள் அப்பம் பண்ணிவிற்றுச் சொந்தமாகச் சேர்த்த ரூபாய்; இனி அதற்கு 'டை' அடிக்க வேறு அவள் பணம் சேர்க்கவேண்டும். இந்த லட்சணத்தில் வேறே புடவை வாங்குவதாயிருந்தால் குறைந்த பட்சம் பத்து ரூபாய்களாவது வேண்டாம்?"
அதற்குப் பிறகு நான் அவளை ஒன்றும் கேட்கவில்லை. எங்கள் கடையில் வேலை பார்க்கும் ஒரு பையனைக் கூப்பிட்டு, ஆறு கெஜம் மல் கொடுக்கும்படி சொன்னேன். மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு அவள் போய்விட்டாள்.
வி.க-26