பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
39

எல்லோரும் கலந்துறவாடி, கவலை சூழும் உலகை மறுத்து களியாட்டம் ஆட வைக்கின்ற விளையாட்டின் தத்துவம், ஒன்றே குலம் என்பதாகும்.

'எல்லோருடனும் நட்பே பிரதானம்' என்று பழகி பழகி மகிழ்வதேயாகும். துயர நினைவுகளை மாற்றி அமைதி வாழும் மனதை உருவாக்க முயல்வதே விளையாட்டின் நோக்கமாகும். இத்தகைய சிறந்த தத்துவம் நிறைந்த விளையாட்டெனும் திறந்த புத்தகத்தைப் படித்து அதனைப் பயன்படுத்திக் கொண்டால், ஆறறிவுடைய மனித குலம், பேரெழில் பூத்த உலகத்தில் பேரின்பம் பெற்றுச் சிறக்கும். நிதமும் திளைக்கும் என்றால் அது நடக்கக் கூடிய காரியமே!

இத்தகைய விளையாட்டை விளையாட வயது வரம்பு உண்டா? அதையும் காண்போமே!