பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 61 முடிந்தது. புற்று நோயை அறிந்து குணப்படுத்தவும் வழி வகுத்தது. பல வகையான தொழிற் சாலைகளில் பயன்படுத்தப் படும் பொருள்கள் ஒட்டை உடைசல் போன்ற குறை ஏதேனும் இல்லாமல் உள்ளனவா எனக் கண்டறியவும், தொழிற் சாலையில் உண்டாக்கப்பட்ட பொருள்கள் சரியாய் இணைக்கப்பட்டுத் திருத்தமாய் உள்ளனவா என்றெல்லாம் கண்டு பிடிக்கவும் இது பெரிதும் உதவிற்று. தொல் பொருள் ஆய்வாளர்க்கும் இதனால் பயன் உண்டு. கண்டெடுக்கும் தொல் பொருள்கள் எக் காலத்தன எனக் கண்டறிதல் போன்ற பல செயல்களுக்கு இது உறுதுணை புரிகிறது. . ரென்ட்கென் எதிர்பாராத விதமாய்க் கண்டு பிடித்த எக்ஸ்ரே கருவியால் உலகம் அடைந்து வரும் நன்மை கட்கு அளவேயில்லை. ரென்ட்கென் சோம்பேறியாய் 'மாட்டை மேய்த்தோமோ கோலைப் போட்டோமோ என்ற முறையில் ஆசிரியர் வேலையோடு மட்டும் இருங் திருந்தால் இவ்வளவு நன்மைகளை உலகம் அடைய முடியுமா? இவர் 1923 ஆம் ஆண்டு காலமான போது ஆராய்ச்சி உலகம் அதிர்ச்சி அடைந்து ஆழ வருந்திற்று.