பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 விழா தந்த விழிப்பு

'வகுப்புக்குத் தாமதமாக வரும்படியா அப்படி என்ன பெரிய வேலை அவனுக்கு?"

சுந்தரமும் சிங்காரமும் ஆர்வத் துடிப்புடன் முருகுவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந் தார்கள். முருகோ அவர்களின் ஆர்வத்தைத் தூண் டிவிடும் வகையில் மேலும் புதிராகவே பேசத் தொடங்கினான்.

'வகுப்புக்குத் தாமதமா வர்றதுனாலேதான் அவங்க வீட்டிலே சோறே பொங்குது?' எனச் சுந்தரத்தின் கேள்விக்குச் சுடச்சுட பதில் அளித் தான் முருகு. எனினும் மர்ம மூடிச்சை அவிழ்த்த பாடில்லை. இது சிங்காரத்துக்குச் சற்று எரிச்சலா கவே இருந்தது. இருப்பினும் தன் வெறுப்பை வார்த்தையால் முருகை நோக்கித் தன் பார்வை யை ஒட்டினான்.

சுந்தரம் மனதுக்கு இன்னும் மர்மம் முழு மையாகத் துலங்காததால், அவனுக்கும் சற்று வெறுப்பாகவே இருந்தது. இருவரும் சரியான காரணத்தை அறிந்து கொள்ளும் வகையில் முரு குவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார் கள். இதுவரை இவர்களின் உரையாடலை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த காளிமுத்