பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 விழா தந்த விழிப்பு

இப்படி முருகு கூறியபோது அவனுடன் காளிமுத்தும் சேர்ந்து கொண்டான்.

"ஆமாம், சிங்காரம் தின்பண்டங்களுக்குச் செலவு செய்யற காசையும், அதனால் வர்ற நோய்க்கு அவன் அப்பா செலவு செய்யற காசை யும் சேர்த்து வச்சா...' அவன் முடிக்கும் முன் சிங்காரம் குறுக்கிட்டான். இருவரும் சேர்ந்து தன்னைக் கிண்டல் செய்வது அவனுக்குப் பிடிக் கவில்லை. அவர்களைக் கேலியாகப் பார்த்தபடி,

“என்னையும் ‘கஞ்சன் அறிவானந்தம்னு நெனச்சியா 25 பைசா கிடைச்சா சேமிப்பு

ஸ்டாம்ப் வாங்கி ஒட்டி வச்சுக்க..' என்றான்.

அறிவானந்தத்தின் சேமிப்பு முயற்சியைச் சிங்காரம் நையாண்டி செய்வதை முருகுவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே, தொடர்ந்து சிங்காரத்தைப் பேசவிடாமல் இடை மறித்த முருகு 'அவன் நாளைக்கு நல்லதுன்னு இன்னிக்குச் சேமிக்கிறான். இதிலென்ன தவறு என்று பதிலடி கொடுத்தான். சிங்காரமும் சளைக் காமல் தொடர்ந்து வாதிட்டான்.