பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 விழா தந்த விழிப்பு

'உங்க தாத்தா எவ்வளவு பெரிய உண்மை யை, எவ்வளவு அழகாய்ச் சொல்லியிருக்கார்.' சிங்காரத்தின் பாராட்டை ஆமோதிக்கும் வகை

யில் காளிமுத்து தலையாட்டினான்.

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப் பதைக் கேட்டுக் கொண்டே வந்த முருகு, இடை மறித்துப் பேசினான்.

'சிங்காரத்துக்கு என்ன வந்தாலும் வராவிட் டாலும், அறிவானந்தத்துக்கு இந்த ஆண்டும் வழக்கம்போல பரிசு கிடைக்கத்தான் போகி

றது!'

இதைக் கேட்க சிங்காரத்துக்கு எரிச்சலாக இருந்தது. கேட்க விரும்பாதவன்போல முகத் தைச் சுழித்தான். காளிமுத்து நெற்றியைத் தூக்கி, “என்ன பரிசு?' என்று கேட்டான்.

இந்த ஆண்டும் வழக்கம்போல் நடக்கப் போகும் சிறு சேமிப்பு வார விழாப் பேச்சுப் போட்டி முதற் பரிசு, அதோட, சிறந்த சிறு