உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 விழா தந்த விழிப்பு

ஆமா, சிங்காரம் அம்மா பக்கத்திலேயே கண்டிப்பா இருக்கணும்னு டாக்டர் சொல்லியி ருக்கிறார். இதோ பார்! இதிலே நாளை பேசப் போறதைக்கூட ஒரு தடவை எழுதிப் பார்த்தேன். ஆனால் போட்டியிலே கலந்துக்க முடியாமப் போச்சு பரவாயில்லை. அம்மாவைவிடப் பேச் சுப் போட்டியா முக்கியம்?

ஏக்கப் பெருமூச்சோடு சொல்லி முடித்தான் அறிவானந்தம்.

சிங்காரத்திடம் காட்டிய பேச்சுத் தாளை அருகே மருந்துகள் வைக்கப்பட்டிருந்த மேசை மீது வைத்தான் அறிவானந்தம். அதைக் கவ னித்துக் கொண்டிருந்தான் சிங்காரம். அவனிடம் பேசிக் கொண்டிருந்தபோதே, அவன் உள் மனம் வேலை செய்தது. அறிவானந்தத்துக்குத் தெரி யாமல் அதைத் தட்டிச் செல்லத் திட்டமிட்டான். அறிவானந்தம் பேசிக் கொண்டிருந்தபோது நை சாக அத் தாள்களை எடுத்துக் கொண்டான். யாருக்கும் தெரியாமல் பாக்கெட்டில் திணித்துக் கொண்டான், சேகரோடு சேர்ந்து அறிவானந்தத் திடம் சொல்லிவிட்டு வெளியேறினான். மா பெரும் காரியத்தைச் சாதித்துவிட்டது போன்ற பெருமிதம் அவனுக்கு ஏற்பட்டது. கூடவே, திருட்டு வெளிப்பட்டால் என்ன அவமானம் ஏற்படுமோ என்ற திகிலும் ஏற்பட்டது. இருந் தாலும் ஆசைக்கு வெட்கமில்லையே! ஆசை அச்ச உணர்வை விஞ்சி நின்றது.