பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - I 39 ஆட்சேபங்கள் ஒவ்வொருவரும் தேச rேமத்தையும் குடும்ப நலனையும் குழந்தையின் நல்வாழ்வையும் தாயின் சுகத்தையும் கருதிக் கர்ப்பத் தடை முறைகளை அறிந்துகொள்வதும், அவசியப் படும்பொழுது அனுஷ்டிப்பதும் அவசியம் என்பதற்கான காரணங்களை ஆரம்பத்தில் கூறினேன். அநேகமாக எல்லோ ரும் அந்தக் காரணங்களையும் அவசியத்தையும் ஒப்புக் கொள்ளவே செய்கிரு.ர்கள். ஆயினும் சிலர் நாம் கண்ட முறைகளைக் குறித்து ஆட் சேபங்கள் கூறுகிருர்கள். அவைகள் சரிதான என்று ஆராய வெண்டியது அவசியமாகின்றது. அப்படிக் கூறப்படும் ஆட் சேபங்களில் மூக்கியமானவை எட்டு. அவற்றை ஒவ்வொன். ருகக் கவனிப்போம். விபசாரம் கர்ப்பத்தடை முறைகள் விபசாரம் அதிகப்படுவதற்கு, வழிகோலும் என்பது ஒரு ஆட்சேபம். ஆண்களும் பெண் களும் குழந்தை பிறந்துவிடுமே என்று பயந்து விபசாரம் செய்யாமல் இருக்கிருர்களாம். குழந்தை பெருமல் சம்போக இன்பம் துய்க்க வழிகளைக் கற்றுக் கொடுத்துவிட்டால் அவர் களுக்கு அந்த பயம் போய்விடுமாம். அதிக தைரியமாக விப சாரத்தில் இறங்கி விடுவார்களாம். அப்படியால்ை கர்ப்பத்தடை முறைகள் தெரியாத வர்கள் எல்லோரும் விபசாரம் செய்யாமல் இருக்கவேண் டுமே, அப்படித்தான உலகில் நடைபெற்று வருகிறது? இப். பொழுது தானே கர்ப்பத்தடை முறைகளைப் பற்றிப்பேச ஆரம்பித்திருக்கிருேம். ஆயினும் ஆயிரக்கணக்கான வருஷங், களாகக் கூடா ஒழுக்கம் நடந்துதானே வருகிறது? அதன் காரணம், யாது? தவருக நடக்க விரும்புகிறவர்களை எந்தக் கஷ்டங்களும் தடுத்துவிட முடியாதல்லவா? மனுதர்ம சாஸ்திரம் விபசாரத்துக்கு மரண தண்டனை விதித்ததே, அப்படியிருந்தும் மனு நீதிப்படி ஆட்சி நடைபெற்ற காலத் தில் விபசாரம் நடவாமல் இருந்ததா, இல்லையே.