உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 8 - விவாகமானவர்களுக்கு - கோழியும் குஞ்சுகளும் குப்பை மேடுகளில் பூச்சிபுழுக் களைப் ப்ொறுக்கித் தின்று ஜீவிக்கும், வேறு தேவையுமில்லை, அதனல் வேறு கவலையுமில்லை. ஆனல் போதுமான பண மில்ல்ாவிட்டால் புதல்வர் புதல்விகள் வளர்வ தெப்படி ? குழந்தைகள் பெற்றுவிட்டால் போதுமோ ? அவை தாமாக வளர்ந்து விடுமோ ? குழந்தைகள் வளர்வதற்கு ஆகாரம், ஆடை, காற்றும் வெளிச்சமுமுள்ள வீடு, விளையாடத் தோட்டம், விளையாட்டுக்கருவிகள் முதலியன தேவை. குழந்தை பிறந்து ஒரு வருஷம்வரை தாய்ப்பாலே ஆகாரம். அதல்ை அதன் வளர்ச்சியும் ஆரோக்கியமும் அன்னையின் பாலைப் பொறுத்தேயிருக்கிறது. தாய்ப் பால் சத்துடைய தானுல் குழந்தை வளரும், சத்தில்லாவிட்டால் குழந்தை மெலியும். நோய் வரும், கணைநோய் காணும், போதும் உலக வாழ்வு' என்று போய்விடவும் செய்யும். குழந்தை பிறந்தவுடன் அதன் நிறை 6 ராத்தல் என்ருல், 6 மாத மானவுடன் 12 ராத்தலாகவும், 12 மாதமானவுடன் 18 ராத்தலாகவும் கூடியிருக்க வேண்டும் என்று வைத்திய நிபுணர்கள் கூறுகிருர்கள். தாய்ப் பாலில் போஷணைக்குரிய சத்துக்கள் நிரம்பியிருந்தால், குழந்தையின் நிறை பிறந்த அன்றுள்ளது ஆருவது மாதத்தில் இரட்டிக்கவும், பன்னி ரண்டாவது மாதத்தில் மும்மடங்கு ஆகவும் காணலாம். தாய் குழந்தை அழும் வேளையெல்லாம் பால் கொடுக்கிருள். ஆளுல் அதைக் கொண்டு அந்தக் குழந்தை போதுமான போஷணை அடைந்து விட்டதாகக் கூறமுடியாது. தாய் உண்ணும் ஆகாரத்தைப் பொறுத்தே அவள் பாலின் சத்தும் இருக்கும். பால் கொடுக்கும் தாய்மார் பசும்பால், அது சம் பந்தமான உணவுகள், பழங்கள், பச்சைக் காய்கறிகள் முதலியன அதிகமாக உண்ண வேண்டும் என்று வைத்தி யர்கள் கூறுகிருர்கள். ஆனால், பாலும், பழமும், பச்சைக் காய்கறியும் விலை மிகுந்தன அல்லவா? அவை ஏழைத்தாய் மார்க்குக் கிடைப்பது எப்படி? குழந்தைக்கு ஒரு வயதாயிற்று. ஆண்டு விழா கழிக்கும் அ தி ர் ஷ் ட ம் அடைந்து விட்டது. அன்ன்ையின் பால் குடியாமல் -ஆவின் பால் குடிக்கும் பருவம். ஆனல் ஆவின் ப்ால் அனுதினமும் எவ்வளவு தேவை : தினந்தோறும் குழந் தைக்கு 1 பைண்ட்-20அவுன்ஸ்-பக்காவுக்குக் காலே வீசம் படி பசும்பால் வேண்டும் என்பது வைத்தியர் முடிவு.