பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 - விவாகமானவர்களுக்கு - வருஷங்கட்கு முட்டைகளைத் தயாரித்து அனுப்பும் வேல்ையை நடத்தி வருவதுண்டு. அதனால் மாதவிடாய் நின்றுபோன பெண்களும் குழந்தை உண்டாவார்கள். அதனல் டாக்டர் ஸ்டோப்ஸ் அம்மையார் கர்ப்பத்தடை அனுஷ்டிப்பதானுல் மாதவிடாய் நின்ற பிறகு குறைந்த பட்சம் 3 வருஷங்களேனும் அனுஷ்டிக்கவேண்டும் என்று வற்புறுத்துகிருர். ஆகவே மாதவிடாய் காண்பதற்கும் கர்ப்பம் உண்டாவதற்கும் சம்பந்தமே யில்லை (2) தாய் குழந்தைக்கு பால் கொடுக்கும்பொழுதே கர்ப்பம் உண்டாகவும் செய்யலாம். அப்படிப் பல சந்தர்ப் பங்களில் நேருவதுண்டு. சில பெண்கள் குழந்தையைப்பிர சவித்து ஒரு மாதகால மாவதற்குள் கூட்க் கருத்தரித்து விடுகிருர்க்ள். (3) பால் கொடுக்கும் வரை குழந்தை உண்டாகாது என்று எண்ணி அதிகக் காலம் பால் கொடுத்துக்கொண் டிருப்பதால் கருதும் காரியம் கைகூடுவது சந்தேகம் என்பது மட்டுமன்று; அதனால் தாய்க்கும் குழந்தைக்கும் அதிகமான தீமைகளும் விளைகின்றன; சாதாரணமாகக் குழந்தைக்குப் பத்து மாதம் வரையே முலைப்பால் கொடுக்க வேண்டியது. அதுவரை அந்தப் பாலைச் சீரணிக்கத் தக்கவாறே அதன் குடலும் அமைந்திருக்கிறது. ஆனல் பத்து மாதத்துக்கு அதிகப்பட்டுவிட்ட்ால் அதற்கு வேறு உணவு உண்பதற்குத் தக்கதாகப் பற்களும் முளைக்கின்றன; சீரணிக்கத் தக்கதாகக் குடலும் மாறிவிடுகின்றது; தாயின் பாலும் போவிக்கக் கூடிய சக்தியில்லாமலும் ஆய்விடுகின்றது. ஆதலால் பத்து மாதங்கட்குப் பிறகும் முலைப்பால் கொடுத்து வந்தால் குழந்தைக்குப்போதுமானபோrணை கிடையாமல் போகும். தாயானவள் தன்னுடைய முலைகளில் பால் சுரந்துகொண் டிருப்பதால் அதுவே குழந்தைக்குப்போதிய உணவு என்று எண்ணிக்கொள்கிருள். ஆல்ை குழந்தையோ உடம்பு வெளுத்து, வயிறு பருத்து, கால் கைகள் சூம்பி நெஞ்சு கூடிப் போகின்றது. அத்தகைய குழந்தைகள் அநேகர்க்குச் ரேணம் சீர்குலைந்து போகிறது , சிலர்க்கு மூளைக் கோளாறும் உண்டாய் விடுகிறது. தாயும் அனுவசியமாகத் தன்னுடைய ரத்தத்தைப் பாலாக்க இடங்கொடுத்துக் கொண்டிருப் .பதால் பலவீனம் அடைந்து விடுகின்ருள். சில பெண் களுடைய கண்களும் காதும் கூடக் கெட்டுவிடுகின்றன.