பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 - விவாகமானர்வகளுக்கு - அவனுக்கும் தீமை உண்டாவதில்லை. இந்த முறையைப் பழகிவிட்டவர்க்கு விந்து வெளியாக வேண்டும் aಘಿ'; உண்டாவதே யில்லையாழ், பெண் இன்பம் பெற்றத்ளுல் ஆணுக்கு ஆறுதலுண்டாகிவிடுகின்றத்ாம். இந்த முறையை 'ஒனிடா” என்ற சமூகத்தார் 30வருஷ காலமாகக் கையாண்டு வந்தார்கள். அவர்களில் ஆண்மகன் எவனும் பெண்மகள் எவளுடனும் இந்தமாதிரி யாகக் குழந்தை உண்டாகாத சம்போகம் வைத்துக் கொள்ளலாம். ஆரம்பத்தில் வாலிபர்க்கு வயோதிகர்கள் முறையைக் கற்றுக்கொடுத்துப் பழக்குவார்களாம். இந்த முறையால் அந்த சமூகத்தார் நன்மையே அடைந்தார் களாம். ஆ ம் வெளி உலகத்தாருடைய அபவாதச் சொற்களை மதித்தே இந்த விதமான வாழ்க்கை முறையை விட்டு விட்டார்களாம். இந்த முறையில் தீமை உண்டாவதில்லை என்று ஸ்டோப்ஸ், எல்லிஸ் போன்ற மேதாவிக்ள் கூறுகிருர் கள். அத்துடன் இந்தமுறைக்குப் பணச் செலவும் ல்லை. ஆண் மகனுக்கு விந்துச் செலவுண்டாகி ஆற்றல் குறைவது -மில்லை. ஆனல் மனத்தை அடக்கக் கூடிய வல்லமை உடைய வர்களே தான் இதை கையாள முடியும். சாதாரணமான வர்களுக்குச் சாத்தியமில்லை. ஆனல் டாக்டர் ஸ்காட் என் பவர் விந்தைச் சீக்கிரமாக வெளியாகாமல் தடுக்கக்கூடிய பயிற்சி முறைகளைப் பழகி அந்த அடக்கத்தை அடைந்து விடலாம் என்று கூறுகிருர். அதிலும் மற்ற நாட்டாரைவிட் இந்திய மக்களுக்கு அது எளிதில் கைகூடும் என்று ஹாவ்லக் எல்லிஸ் சொல்லுகிரு.ர். இவ்விதமாக இந்த முறையைப் பழகிக் கொள்ள முடி யும் என்று நிபுணர்கள் கூறியபோதிலும், சாதாரணமான ஜனங்கள், அதிலும் இளமை இரத்தம் மிகுந்த யுவர்களும், யுவதிகளும் இந்தமுறையை அனுஷ்டிப்பதால், தேக சுகத் துக்குத் தீமையே உண்டாகும் என்று ஸ்டோப்ஸ் அம்மை .யார் எழுதுகின்ருர்.