பக்கம்:வீடும் விளக்கும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 விடும் விளக்கும் என அவலச்சுவை ததும்ப அழகாக அமைந்துளது அப்பாடல். வள்ளுவர் வருத்தத்திற்குக் காரணம் அம்மையின் அரும்பணி யன்றோ? பொழுது போக்கு: எனவே, பெண்மணிகள் இக்கடமைகள் யாவற்றை யும் நன்குணரவேண்டும், நற்பொழுது போக்க வேண்டும். இ.தறியாத பெண்டிர் சிலர், வீடுகளில் கும்பலாக மாதர் மாநாடு கூட்டி விடுகின்றார்கள். பயனற்ற வீண்பேச்சுகளைக் கொட்டி யளக்கின்றார் கள். அல்லது எப்போதும் தாயமாடிக்கொண்டிருக் கின்றார்கள். ஆனால் நாளெல்லாம் உழைக்கும் பெண் மக்கட்கு ஓய்வு வேண்டியதுதான். அது குறிப்பிட்ட ஓரளவினதாக இருக்க வேண்டும். ஓய்வாகவும் தெரிய வேண்டும்; அதனோடு நல்ல பயனளிப்பதாகவும் இருக்கவேண்டும். நல்ல நூற்கள்தமையோ (புத்தகம்), செய்தித்தாட்களையோ (பத்திரிகை) வைத்துக் கொண்டு படிக்கலாம். தமக்குப் படிக்கத் தெரியாது போயின், தெரிந்தவர்களைப் படிக்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டாயினும் இருக்கலாம். மேலும் பின்னல் முதலிய சிறு கைத்தொழில்களையும் செய்யலாம். பல்வகை வன்மை: மற்றும், பெண்கள் வேலை செய்வதற்கு வேலைக்காரியாயிருந்தால் மட்டும் போதாது. சிற்றின்பத்திற்கு மனைவியாய் இருந்தாலும் போதாது.