பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119 கோட்டைக்குத் தென்புறமாகவே தான் பச்சைக் கூடாரஞ் செய்து இருந்தார்கள். காட்டுப் பாராக்களுந் தானிறுத்திச் சுத்தி கோட்டை கட்டுப் போலே தானிருந்தார். பார்த்திபன் கும்பினிப் பாளையத்தைச் சுத்திப் பாராக் காரரைத் தானிறுத்தி சாத்திர வேதப் படியாக வெகு நேர்த்தியாய் கும்பினிப் பட்டாளம் பட்டாள மேசரொரு புறமாம் அசல் பட்டாணி மார்களொரு புறமாம். 3370 வெட்டுந் துரைமார்களோர் புறமாம் சோஷர் மெட்ட்டு மெட்டாகவே தானிறுத்தி குதிரைப் பட்டாளத்தை முன்னே வைத்தார் ரெண்டு கூழைவால் யானையைப் பின்னே வைத்தார். சதிராகப் பாளையம்மால் பார்த்து நல்ல தம்பூருக் காரனை முன்னே வைத்தார். முக மிலங்கவே பணிகளனிந்திடும் முன்னுாறு குதிரைகள் உன்னிதமாய் வகை வகையாகத் தானிறுத்தி நல்ல வர்ணப் பட்டாள மணி வகுத்தார். 3,380 மல்லூகப் பல்லூகச் சகட யூகமாகக் கல்லு வெடிகாரர் தானிருந்தார். சொல்லுக் கடங்காத சோஷர்கள் மல்லர்கள் புல்லாங் குழல்கார வல்லவர்கள். மாதிரியாகவே சோஷர் வெள்ளைக் காரர் வங்கி அபின்களெடுத்துக் கொண்டார். போதரவாகவே சாதி வெள்ளைக் காரர் போதை லாகிரி நடத்திக் கொண்டார். அக்கினி மேசர் தன் சொல்படியே அங்கே அணியணியாகவே பட்டாளம் 3390 திக்குத் திசை களதிரும்படி ஒரு சேகரமாகவே பீரங்கி வைத்து பீரங்கி நிறுத்து மென்ருர் கரு மருந்து போட்டங்கிருத்து மென்ருர். பத்தெட்டுகுண்டுகள் போட்டார்கள் வெடி பத்து வாயில் நெருப்பிட்டார்கள்