பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. 129 மைக்காரப் பாண்டியன் ஊமைத் துரை முன்னே வந்து சலாம் சொல்லிக் கொண்டானே. அந்நேரம் ஊமைத்துரை வீரபாண்டியன் அச்சு மட்டத்தினிலேறிக் கொண்டார். சன்னதம் வந்தாற் போல் வெள்ளைக் குதிரை மேல் சாரி நடத்துரார் நல்லோரே. எள்ளுப் பொறிப்போல பொறித்திடென்று தேங்காய் சில்லுச் சில்லுப் போகத் தானடித்தார். துள்ளித் துள்ளிக் கொண்டு ஊமைத்துரை வெடி சுட்டானே சப்தம் பளிச் செனவே 37 30 செம்பாதி ராத்திரி வேளையிலே தம்பி கம்பளத்தார் கொள்ளை தானடிக்க கும்பினித் துரைகளும் எண்பது பேரங்கே வம்புகளாக மடிந்தார்கள், மேஷர்கள் சோஷர்கள் நாலாயிரம் பேர்கள் நாசமாய் போச்சுதே பட்டாளம். வாசு நாய்க்கர் அமல்தார் சமைதார் நானுநூறு முன்னுாறு பாடாச்சு. கிண்ணிப் பட்டாளம் கிரண்டப் பட்டாளத்தில் எண்ணுாறு சிப்பாகி பாடாச்சு. 岛Y4伊 கொம்புக் காரருடன் தம்பூருக்காரர் நிம்பர்கள் பத்துப் பேர் பாடாச்சு. ஐம்பதறுபது எண்பதெழுபது அச்சு மட்டங்களும் பாடாச்சு பட்டாள மேசரும் பட்டாள சோஷரும் பாதிக்குமேலே அழிவாச்சு கெட்டகுடி கெட்டு தானுக்கால் தம்பி ஒட்டிக்கு ரெட்டி' அழிவாச்சு, சட்டைக்காரச் சோஷர் கெட்டிக்காரத் துரை சாதி வெள்ளை க்கார ரிப்படியாய் 37.50 பட்டாளஞ் சேதமாய்ப் போனதைக் கண்டந்தப் பார்த்திபன் அக்கினி மேஷர் துரை பாராசாரியின் மட்டத்திலேறியே பட்டாக்கத்தியுந்தானுருவி சாராய வெறி போட்டுக் கொண்டு ரொம்ப வீரியமாய்க் கோபந்தான் மீறி மாற்றன் வஞ்சகம் பார்த்தீர்களோ பாதி ராத்திரி வேளையில் மோசஞ் செய்தான் வீ. 9