பக்கம்:வீர காவியம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129

மகப்பெறு படலம்


'ஈன்றமகன் என நம்ப மறுத்து நின்ருல் எவ்வனந்தான் தெளிவிப்பேன்? உலகில் என்னைப் போன்றமகள் ஒருத்தியினைக் கண்ட துண்டோ? புதல்வனுக்கும் கொழுநனுக்கும் இடையில் நின்றே ஆன்றதுய ருடையேய்ை ஊசல் போல ஆடுகிறேன்; வாடுகிறேன்; என்றுள் நைந்து தேன்றுளியின் அனையஒரு நினைவு தோன்றத் தெளிமனத்தள் இளையோன்பால் நவில லுற்ருள். 258 'கலங்குநிலை கொண்டுழலும் மைந்த ஒன்று கழறுகிறேன். இதனைக்கேள்! கருவில் நீதான் துலங்குகிற பொழுதத்துன் தந்தை எற்குத் துயர் தந்து பிரியுங்கால், மணிகள் மேவி இலங்குமொரு பொன்னணியைக் கையிற் றந்தே எழில்தவழும் வீரமகன் பிறப்பான், அந்த வலங்கெழுமும் மகவுக்குக் கையிற் கட்டு! வலிவுடனே பெரும்புகழும் வாய்க்கும் என்று, 259 பலபுகன்ருர்; எனைத்தேற்றிப் போரை நோக்கிப் பறந்தகன்ருர்; அவர் தந்த அணியின் ஓர்பால் குலமகளும் தந்தைபெயர் பொறித்தி ருக்கும்; கொடுத்த அணி இதுகொள்க! இதனை என்றும் விலகலிலாப் பூணுக அணிந்து பேணி வென்றிகொண்டு திகழ்க’ என மொழிந்து நின்ருள்: உலகமெலாம் பெற்ருன்போல் அதனை வாங்கி உவகைமிகக் கையகத்தே அணிந்து கொண்டான். 260

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/132&oldid=911223" இலிருந்து மீள்விக்கப்பட்டது