இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
59 காட்சிப் படலம்
இயல் 27
போதலர் கறுமணப் பொய்கைக் கரையில்
காதலர் நெஞ்சம் கலந்து மகிழ்ந்தன.
நாணத்தால் மிகச்சிவந்து தோன்றும் கன்னம்;
நகை தவழ்ந்து விளையாடி இதழ்கள் மின்னும்; காணத்தான் மீனெனக்கண் பிறழ்ந்து பாயும்;
காளையவன் நோக்குவதால் மருண்டு சா யும்; காணத்தால் இயல்வளைகள் விளங்கும் செங்கை;
கச்சுக்குள் அடங்காமல் அழுங்கும் கொங்கை; பாணத்தால் வடித்தெடுத்த விழியின் ஒரம்
பாய்ந்துழல்வோன் இவ்வனைத்துங் கண்டான் வீரன்.
'நாளொன்றில் சிலைவடிக்கும் ஆற்றல் மிக்கோன் நனிவிழைந்து திங்கள் பல சிந்தித் தாய்ந்து, தாளென்றும் இடையென்றும் மார்பம் என்றும்
தன்னை நிகர் முகமென்றும் விழிகள் என்றும் தோளென்றும் ஒவ்வொன்றும் பல நா ளாகத்
தொன்முறையில் வழுவாமல் படைத்துத் தந்த வாள்வென்ற விழியழகுச் சிலையே! நின்றன்
வாய்மலர ஏன் சிரித்தாய்?' என்ருன் வேழன். 105
காணம்-பொன்