இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
73 திருமணப் படலம்
இயல் 32
மணமகன் யாரென அறியா மன்னன் கனலெனச் சிறிக் கடுமொழி பகர்ந்தான்.
மன்னவன்றன் உரைகேட்ட தோழி ஐய!
மன்றலுக்கு மனமொப்பி விட்டாள் தையல்’ என்னலுமவ் வயத்தரசன் களிப்பின் மூழ்கி,
என்ளுேற்றேன் இனிய மொழி இதனைக் கேட்க! மின்னனைய இடை யுடையாள் எழிலுக் கேற்ற
மேலவனைத் தேர்ந்தெடுத்து மணமு டிப்பேன்; நன்னகருள் மனமுரசம் விரைவில் கேட் பாய்:
நலியுமென்றன் கலியகன்ற தின்றே. என்ருன். ! 32
கன்னிமகள் வாழ்க்கைக்குத் துணையைத் தேடிக்
கலங்குநிலை நினக்கில்லை; தன்ம னத்தே உன்னியுளள் ஒருவனைத்தான்; அவனே பாரில்
ஒப்பரிய செப்பரிய வீர வைன்; மன்னவ நீ அன்னவற்கு மகளைத் தந்தால்
மாநிலத்துப் பெருமையெலாம் நின்னைச் சாரும்'; என்னுமொழி செவிபுகுதா முன்னர் வேந்தன்
'எந்நாட்டிற் கரசனவன் இயம்பு கென்ருன், 133
என் நோற்றேன்-என்ன தவம் செய்தேன்,