இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வீரகாவியம் 82
இயல் 36
மன்னவன் மொழியெலாம் வந்தவள் உரைத்திடக் கன்னலின் மொழியாள் களிப்பில் மூழ்கினள்.
விடைபெற்று நீங்குமவள் துள்ளிச் சென்று
வேல்விழிக்கு நிகழ்ந்தவெலாம் விளக்கி நின்ருள்; தடையுற்று விடுமோ தன் காதல் என்று
தவித்திருந்தோள் நற்செய்தி கேட்டு நெஞ்சில் உடைபட்ட மடைபோல உவகை பொங்கி
உடலெல்லாம் பாய்வதுபோல் உணர்ச்சி கொண்டாள்; இடைமட்டும் மெலிந்திருக்க எழிலைத் தாங்கும்
ஏனையுறுப் பத்தனையும் விம்மிற் றம்மா! 153
தான்விழைந்த மணமகனே கிடைத்து விட்டான்;
தனைப்பெற்ருேன் மறுப்பொன்றும் உரைக்க வில்லை; மான்விழைந்த பார்வையினுள் மனம்போல் வாழ்வு வாய்த்தமையாற் பூரிப்புக் கொண்டு நின்ருள்: மீன்வளைந்து விளையாடும் குளிர் த டத்துள்
மேவுமெழிற் ருமரைபோல் மலர்ந்தி ருந்தாள்: தேன்விளைந்த காதலிலே வெற்றி கண்டால்
தெரிவையர்க்கு மேலுமொரு பேறும் உண்டோ? 154