பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

பாவட்டஞ் சோலையிலே - குயில் வந்து வாய்விட்டுக் கூவுதய்யா.

என்று பழைய பாடல் ஒன்று உண்டு.

இளவேனில் வந்தவுடன் குயில் கூவுவது வழக்கம். அதுபோல இலக்கிய ஆர்வம் ஏற்படும் போதெல்லாம் சுரதா பதிப்பகம், நூலை உருவாக்கி வெளியிட்டு வருகிறது. -

இனிமேல் தொடர்ந்து நூல்களை வெளியிட வேண்டும் என்ற முனைப்புக் கொண்டுள்ளது சுரதா பதிப்பகம்.

அந்த முனைப்பிற்கு அடையாளம்தான் வேகமான சிந்தனைகளைக் கொண்டு, விரைந்து வெளிவரும் வெட்ட வெளிச்சம் என்னும் இந் நூல்.

இதனை அளித்துள்ள உவமைக் கவிஞர் சுரதா அவர்களுக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறோம்.

நல்ல முறையில் அச்சிட்டுத் தந்துள்ள வெற்றி அச்சகத்திற்கும், அணிந்துரை வழங்கிய ஏழாயிரம் பண்ணை சண்முக சுந்தரக் கவிராயர் அவர்களுக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம்.

கல்லாடன் 'டாக்டர் இலக்குமணசாமி சாலை, - கலைஞர் கருணாநிதி நகர், சென்னை - 600 078.