இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
புலவர் த. கோவேந்தன் டிலிட் 1932
கோவேந்தன் பாடிக் குவிக்கின்றான் நாளடைவில்
பாவேந்தன் ஆய்விடுவான் பார்.
- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் (1963)
பல்லா யிரம்நூல் படித்தறியும் பண்பாளன்;
நல்லார் இணைக்கத்தின் நட்பாளன்; - வல்லான்
எழுதுகின்ற நூல்எல்லாம் இன்தமிழுக்கு ஏற்றம்;
தொழுகின்றேன் கோவேந்தன் தொண்டு.
- அருட்கவி அரங்க சீனிவாசன் (1975)