உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெற்றி நமதே.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 மேலும் பல வெற்றிகள் நமக்கு நிச்சயமாகக் குவியும். ஆனால் நமக்கு மண்ணாசை கிடையாது என்பதைத் தெரிவிப் பதற்குஎடுத்துக்காட்டாக மேற்குப் பகுதியில் போர் நிறுத்தத் திற்கு இந்தியா தயாராக இருக்கிறதென்று அறிவித்திருக் கிறோம். மக்களின் கரங்கள் யாவும் துப்பாக்கிகளாக மாறும் போர் நிறுத்தம் செய்யப்படும் என்று பிரகடனம் செய்யப்பட் டிருக்கிறது. அதற்கு மேலும் தன் சீனா அதை பாகிஸ் தா ன் காதில் போட்டுக் கொள்ளாமல், முடிவை விடாமல், வேறு பல நாடுகளின்-அமெரிக்கா, போன்ற ஆதிபத்திய நாடுகளின் தூண்டுதலினால் தாக்குவதானால், இந்திய மக்களின் அத்தனை ங்களும் துப்பாக்கிகளாக மாறி வரும்; எதிரிகளை வீழ்த்தும் என்ற உறுதியினை இந்த அவை யிலே நாம் எடுத்துக்கொள்கிறோம் என்று கூறி இந்தத் தீர்மானத்தை முன்மொழிகிறேன். க மரத்தடியில் பிறந்த கொடி முன் மொழியப்பட்ட தீர்மானத்தை அனைத்துக் கட்சி களினுடைய தலைவர்களும் வரவேற்றுப் பாராட்டி இந்த மன்றமே ஒருமுகமாக நிறைவேற்றுகிற கட்டத்தில் நான் மேலும் சில வார்த்தைகளைக் கூறுவது பொருத்தமுடையது என்று கருதுகிறேன். சுதந்திரக் கொடியை வங்காள தேசத்து மக்கள் ஏற்றிய நேரத்தில் அதை ஏற்றி வைத்திருப்பதற்குக் கூட அவர் களுக்கு ஓர் இடம் இல்லை. வங்க தேசத்தில் எங்கேயோ ஒரு மூலையில் ஒரு மரத்தடியில் தங்களுடைய அரசை அவர்கள் உருவாக்கினார்கள். இவர் ஜனாதிபதி, இவர் பிரதமர், இவர் ராணுவத் தளபதி என்றெல்லாம் அவர்கள் பிரகடனம் செய்தபோது உலக நாடுகள் கேலிக் கண்களோடு அந்தக் காட்சியைப் பார்த்து ரசித்ததையும் இது எங்கே நடக்கப் போகிறது? புது நாடா? இது உருவாகுமா ?” என்றெல்லாம் கேட்ட கேள்விகளையும் யாரும் மறந்திருக்க முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெற்றி_நமதே.pdf/31&oldid=1706865" இலிருந்து மீள்விக்கப்பட்டது