பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் 107

அது, தவறில்லா நிறைவான நிலை என அழைக்கப் படும்;

அவ்வாறாகவே எல்லாம் நிறைந்த ஒருவர் என தெளி வாக்கப்படுகிறது.

அதே வகையில் உண்மை அறியப்படுத்தப்பட்டுள்ளது. எல்லாம் நிறைந்த ஒருவாை அறிந்தவர்கள் குற்றமில்லா முழுமையானவர்கள்;

அவர்கள் தீவினை இல்லாதவர்கள், உண்மை எனும் வீட்டில் குடியிருந்து புனிதத் தன்மை என்னும் உடை அணிபவர்கள்.

உற்றுப் பார்! எல்லாம் நிறைந்த ஒருவர் வெளிப்படு கின்றார்;

அவரை வழிபடுபவர்களுக்கு அறிமுகமாகின்றார்; தீமை எனும் உடை அவர்களிடமிருந்து அவிழ்ந்து போகிறிது,

குற்றமற்ற உடையான நன்மையை அணிந்து கொள் கிறார்கள்;

தவறுகள் உள்ள கலயங்கள் உடைக்கப்பட்டு, உண்மை எனும் புதிய கலயங்கள் வாழ்க்கை எனும் கொடிமுத்திரிச் சாற்றினால் நிரப்பப்படுகின்றன.

எல்லாம் நிறைந்த ஒருவர்மேல் நம்பிக்கை உடைய வர்கள் அதனைப் பருகி நிறைவு அடைகிறார்கள்.

அவரின் சொல் கேட்டு செயல்படுகிறவர்களுக்கு நிலையான மகிழ்ச்சி கிடைக்கிறது.

எல்லாம் நிறைந்த ஒருவரை நம்புகிறவர்கள் யார்?

அவரின் சொற்படி செய்ல்படுபவர்கள்'யitர்?