இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
106 வெற்றிமேல் வெற்றி பெற.
உறக்கமின்றி அவரைக் காத்து நிற்கும் காவலர்கள் அவரைப் புகழ்ந்துள்ளனர்.
அவர்களின் சோர்வை, அவர், தாமே தாங்கிக் கொள் கிறார்.
துயர்படும் நீங்கள், வாருங்கள்! வந்து மகிழுங்கள்! சோர்வடைபவர்களே! வாருங்கள், வந்து நட்பமைதி யைக் காணுங்கள்!
பாடுபட்டு உழைப்பவர்களே! வாருங்கள், வந்து ஆறுதல் அடையுங்கள்!
ஏனெனில், முதியவர்களின் பேரார்வங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளன.
நாங்கள் ஆசான்’ என அழைக்கும் அவர் தோன்றி யுள்ளார்.
அவரே புனித அன்பின் ஆழமான உள்ளம்!
மூன்றாம் முற்றுணர்வு
எல்லாம் நிறைந்தவர்
நன்மையைச் செய்துவிட்டு யாருக்கும் வெளியிடாமல் இருபபது;
அதுவே பணிவு என அழைக்கப்படும்;
ஒருவரால் துன்புறுத்தப்படுபவர்களுக்கு ஆறுதல் அளிப்பது;
அதுவே அன்பு என அழைக்கப்படும்;
ஒருவரின் பகைவரின் நல்லுாழில் மகிழ்வது;