பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 வெற்றி மேல் வெற்றி பெற...

தன்னலத்தை விட்டுவிடு, அப்போது அவரின் வடிவத் தைக் காண முடியும்.

உண்மையை உன்னால் ஏன் அறிந்து உணர முடிவதில்லை?

ஆசானின் குரலை ஏன் உன்னால் கேட்க முடிவ தில்லை? w

உன்னுடைய தவறுகளினால் நீ உண்மையை அறிந்து கொள்வதில்லை;

ஆசானின் குரலை உன்னால் கேட்க முடியாததற்குக் காரணம் தன்னலக்குரல்கள் உன் உள்ளேயே கூக்குர விட்டுக் குழப்பத்தை உண்டுபண்ணுகின்றன.

பகலவனின் முகத்தை முகில்கள் மறைப்பதுபோல: தவறுகளான முகில்கள் ஆசானின் முகத்தை மறைக் கின்றன;

ஆம்! தீய வினையின் சுமைமிக்க முகில்கள் மாந்தர் களிடமிருந்து பிரித்து மூடிக்கொள்கின்றன.

அங்ங்ணமாயின் ஆசானைக் காணக் கூடியவர்கள் எவர்?

அவரை அறிந்து உணரவல்லவர் யார்? அவருடன் வாழக்கூடியவர்கள் யார்? அவரின் குரலைக் கேட்கக்கூடியவர்கள் யார்?

எவர், தூய்மையான நெஞ்சம் கொண்டவரோ, பண்பாகவும், அருள் உள்ளம் கொண்டவராகவும் இருக் கிறாரோ, சினத்திற்கு மாறாய்ப் பணிவாகவும் வெறுப்பிற்கு மாறாய் அன்பாகவும் உள்ளாரோ, பழிப்பினை மன்னிக்கும் தன்மையும் குறை கூறும்போது அமைதியாகவும் நடந்து கொள்கிறாரோ, அவரே ஆசானைக் காணவும், அவரை அறிந்து உணரவும், அவரின் குரலைக்கேட்கவும், அவருடன் வாழக்கூடியவராகவும் உள்ளார்.