பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 வெறறி மேல் வெற்றி பெற ...

அணுகி வரும் ஒரு பயணியின் கண்களில் படும் ஒரு. பொருளைப் போல,

உள்ளத்திலே மெய்யறிவு உருப்பெறுகிறது,

தன்னைத் தான்ே ஆய்வு முயற்சி எடுப்பவனின் அறிவு அவ்வாறே வளர்ச்சியடைகிறது;

தீமையின் அடிவேரைக் கண்டு கொண்டவன், துறவு எனும் கைகளினால் அதனைப்பிடுங்கி எடுத்து அறிவு, எனும் தீயினால் எரித்துச் சாம்பலாக்குகின்றான்.

அவ்வாறு தன் னைத்தான்ே ஆய்ந்து கொள்பவன், உள்ளத்தின் அடிப்பகுதியைச் செம்மையாக்குவதுடன்,

மனத்திலுள்ள எல்லாத் தவறுகளையும் தவிர்த்துக்

கொள்கிறான்,

தனது தவறுகளைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றைப் பணிவுடன் ஏற்றுக் கொள்பவன்,

மற்றவர்களின் தவறுகளில் வாழ்வதற்கு விரும்ப மாட்டான்,

அவனின் குறிக்கோளான நட்பமைதியை நோக்கி விரைவாகவே முன்னேறுவான்.

அவன், தனது உள்ளத்தைத் துப்பரவாக்குவான். விளங்கிக்கொண்டு, ஆறுதலை தூய்மைப்படுத்துவான்;

தன்னைத் தான்ே அடக்கிக்கொண்டு, அவன் மேலும் தன்னலக் கண்ணால் பார்க்க மாட்டான்;

உண்மையைப் பற்றிக் கொண்டு, உண்மையின்

மறைக்கப்படாத கண்களினால் அதனை அறிந்து உணர்வான்;