பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 வெற்றிமேல் வெற்றி பெற...

எல்லாமே ஒரு விளைவை உண்டாக்கும் தன்மை கொண்டன.

காரணத்திற்கும் விளைவுக்கும் உள்ளே அடங்காதது எதுவுமில்லை.

காரணமும் விளைவும் ஒன்றே! தெய்வீக அறமுறைக் கட்டளை ஒன்றே. பெரும் குழப்பத்திலிருந்து இந்தப் புவிக்கு வந்துள் னோம்;

தடுமாற்றத்திலிருந்து ஒற்றுமைக்கும், அச்சத்திலிருந்து நிலைத்த அமைதிக்கும் வந்துள்ளோம்.

எல்லாவற்றிலும் நன்மை உண்டு. தீமையிலிருந்து கிடைப்பது துன்பம்;

துன் பத்திலிருந்து கிடைப்பது துயரம்; துயரத்திலிருந்து மெல்ல மெல்ல பிறக்கிறது அறிவு. இரவு நீண்டதாக இருந்தாலும் காலை வேளை வரத் தவறுவதில்லை!

அதனுடன் செங்கதிர் ஒளியும் பாடல்களும் சேர்ந்து வருகின்றன.

நீண்ட இரவில் உலகம் மூழ்கியிருந்தாலும், பெருமை மிக்க விடியல் வரும்.

ஓ! அந்த ஒளியின் பிழம்பை நாம் உற்றுப் பார்க்கின் Gparuh!

இனிமேல் எங்களுக்குப் பகைவர்களே இல்லை. எல்லோருமே எங்களுக்கு அன்பானவர்கள். புனிதமானவர்களும் வசைமொழி பேசுபவர்களும் எமக்கு நண்பர்களே.