பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 வெற்றி மேல் வெற்றி பெற.

நேர்மையான மாந்தனின் அமைதியே முழுமை

யானது.

மாற்றத்தினாலும் நிலையற்றவற்றினாலும் அவனின் அமைதி குழம்புவது இல்லை.

வெறி உணர்ச்சியிலிருந்து விடுபட்டதும் மனம் சமநிலை அடைகிறது.

சலனமற்ற நிலையில் அவன் துயரப்படுவதில்லை. எல்லாவற்றையும் அவற்றின் உண்மையான உருவு களிலே காண்கிறான் .

அதனால், அவனிடம் தொடர்ந்து குழப்பம்இல்லை. மாணவன் : ஒ தலைவரே நேர்மையானவரே என் னைக் காத்து அருளினர்!

முழுமையான வாழ்க்கையை எனக்கு வெளிப்படுத்து விட்டீர்;

தெய்வீகமான, ஆனந்தமான வழியை எனக்குக் காட்டிவிட்டீர்;

தன்னலம் ஒழிக்கப்பட்டுவிட்டது; அதனால் நான் உம்மவனாகிவிட்டேன்.

உமது நினைவுகளே என் நினைவுகள. உமது மொழிகளே என் மொழிகள். உமது செயல்களே என் செயல்கள். நிரோ என்றும் இருப்பவர், எனது செயல்கள் எல்லாமே உம்மிடமிருந்தே பெறப்படும்.

இழிவுபடுத்தல் என்பது வாழ்வின் காய்ச்சல். கலைந்துவிடுவதே மனத்திறகு அதிக இருளை அணிக் கிறது. -