பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

இன்னொரு பையன்... நேசலிங்கம் எங்கே?

அவர் பேசிய ஆனந்தத்தில், இன்பநான் தன்னை மறந்து பதில் கூறிவிட்டார். அவனையும் காணோம். அவனும் எங்கேயாவது ஓடிப் போய்ட்டானோ என்னவோ? இங்கே ஒரு நாள் கூட வரலே... உங்களையும் வந்து பார்க்குலே...

‘அப்படியா’ என்றார் குணசேகர். அதற்குப் பிறகு. அவர் எதுவும் பேசவில்லை.

குணசேகருக்கு வந்திருந்து காய்ச்சல் என்பதைவிட காய்ச்சல்கள் என்பதுதான் உண்மை. மலேரியா, டைபாய்டு டபுள் நிமோனியா, இந்த மூன்றும் சேர்ந்துக் கொண்டுதான் அவரை வாட்டிக் கொண்டிருந்தன.

ஒரு காய்ச்சலுக்கு மருந்து கொடுத்தால், அது அடங்கிப் போகும். ஆனால், அடுத்தது ஏறிக் கொள்ளும். இப்படிப் போராடிக் கொண்டிருந்தபோது இந்த அதிர்ச்சி செய்தி அவருக்குக் கிடைத்ததும் உடல் நிலைமை மேலும் மோசமாயிற்று.

அதன் பலன் என்ன ஆயிற்று என்று கூறும் பொழுது நமக்கே மனது கஷ்டமாகத்தான் இருக்கிறது.

பக்கவாதம் அவரை பலமாகப் பற்றிக் கொள்ளவே, ஒரு காலும் விளங்காமல் போய்விட்டது.

எவ்வளவோ பணம் செலவழித்தும், எத்தனையோ பெரிய டாக்டர்கள் மருத்துவம் செய்தும், அவரைக் குணப்படுத்த முடியவில்லை. படுக்கை, அவரை வரவேற்று படுக்க வைத்துக் கொண்டது.

மருத்துவ மனையிலிருந்து வீட்டிற்குக் கொண்டுவந்து விட்டார்கள்.