பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
14

வேறு காரணம்... ஆனால் காலைப் பொழுதினில் எதற்காக... ஏன் ?

வைத்தியர்களைக் கடல் பெண் வாழ்த்திக் கொண்டிருந்தாள். வாலைக்குமரிப் பெண்களின் வாயாரச் சிரிக்கும் சிரிப்பு போல அவள் ஒலியோசைக் கேட்டுக் கொண்டிருந்தது. வந்தவர்களை வரவேற்பது போலத்தான், தன் அலைக்கரங்களால் தாலாட்டிக் கொண்டிருந்தாள்.

"இனிமேல் உங்கள் உடல் தாங்காது நீங்கள் நிம்மதியாக இருக்கவேண்டுமென்றால்" நிம்மதியாக வாழ வேண்டுமென்றால், என்று மருத்துவர்கள் உச்சரித்ததற்குப் பிறகு...

மலைபோல் பெருத்தவர்கள் இலைகள் காற்றில் அசைவது போல அசைந்த கடற்கரையில் நடந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் விட்ட பெருமூச்சு ஏதோ தொழிற்சாலைக்குள்ளிருந்து வருவது போல் உனர்வை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

இதுதான் நோயென்று அரைக்கால் சட்டை பனியன் போட்டு, கான்வாஸ் ஷூவும் அணிந்து கொண்டு வீரர்கள் வீராங்கனைகள் போல வேகமாக மூச்சிறைத்துக் ஓடிக்கொண்டிருந்தனர் சிலர்.

கணவன் மனைவி சமேசராக சிலர் நடந்து கொண்டிருந்தனர். தானும் கூடப் போகாவிட்டால் எங்கே தன் கணவர் கடற்கரை 'வாக்' போக மாட்டார் என்பதாக நினைத்து, பொமை பேசி, இந்த திருக்கோலத்தை ஏற்படுத்திக் காட்டிக் கொண்டிருந்தனர். சில பெண்மணிகள்.

'இன்னும் வாலியம் இருக்கிறது வயதாகவில்லை' என்பதை பிறருக்குக் காட்ட வேண்டும் என்பதற்காக வயோதிகர்கள் சிலர் ஓடிக் கொண்டிருந்தார்கள்.

வைத்தியர்கள் விரட்டியதற்காக வந்தவர்கள் தான் அங்கு அதிகமாகத் தோன்றியிருந்தார்கள்.