பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமமோ பெரிதே! 39 வகைத்து’ என அறுதியிட்டுக் காட்ட இயலாது. ஆயினும் அக்காமமே உவகை ஆருகின்றது. அக்காம ஆட்சி செம்மை யாக அமையின் நாடு நாடாகும். அன்றேல் மேலே நாட்டு நிலையில் மணமும் விலக்கும் பொருந்த, மக்கள் வாழ்வு விலங்கு வாழ்வாகவே கழியும் என்று ஒருதலை. பிற உயிர்கள் அனைத்துக்கும் மேலாக மனிதனுக்கு நல்லதன் நலனும் தீயதன் தீமையும் ஆய்ந்தறிகின்ற பகுத்தறிவை இறைவன் அளித்துள்ளமைதான் அவனே வாழ்வாங்கு வாழவைக் கிறது. அவ்வாறு வாழ்வதற்கு இக்காமம் முதற்படிஇடைப்படி-இறுதிப்படி-எல்லாம். எனவே இந்த வாழ் வின் அடிப்படையை உலகம் மதிக்கவில்லையானல் வேறு எந்த வளனலும் வையத்தை வாழவைக்க முடியாது. விலங் குணர்ச்சி பெற்ற சில மேலை நாட்டு மக்களிடமும் இன்று இந்த நல்லுணர்ச்சி அரும்புவது நற்காலத்துக்கு அறிகுறியே யாம். இனி இக்காமத்துக் குரியாரைப் பற்றிச் சில காண் போம். ஒருவனும் ஒருத்தியும் சாடிப் பெறும் இன்பமே காம இன்பம். அவ்வொருவனையும் ஒருத்தியையும் பற்றிப் பாடு வனவே அகப்பொருட் பாடல்கள் அனைத்தும். ஆயினும் அவ்வொருவனும் ஒருத்தியும் யார் என்று பெயர் சுட்டப்படா மலேயே அகப்பொருள் அமைகின்றது. சுட்டிப் பெயர் காட்டப் பெறின் அது புறமாகும். மக்கள் நுதலிய அகனங் திணையும் சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெருஅர் (அகத். 54) எனத் தொல்காப்பியர் காதல் நெறிப்பட்ட ஐந்திணை ஒழுக் கத்து வரும் தலைவனும் தலைவியும் பெயரால் அழைக்கப்பட மாட்டார் என்கின்ருர். இஃது எத் துணை ப் பொருத்த மானது? தந்ததுன் தன்னைக் கொண்ட தென்றன்னை யென்று இறையொடு கலக்கும் அடியவர் தம்மை மறந்து தம் நாமம் கெடுவது போன்றே இக் காம வாழ்விலும் தம்மை மறந்து