இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
22
வள்ளியம்மாள் கல்வி அறம்
அரசியல் வாதிகளும் அல்லர். காரணம் பின்னால் ஆட்சி மாறக்கூடிய தன்மை உடையவர்கள். ஆனால் பொறியியல் வல்லுநர்களும், மருத்துவ நிபுணர்களும், கல்வி அறிவு பெற்றவர்களும் தாம் நாட்டின் உண்மையான செல்வங்கள் என்று பேரறிஞர் அண்ணா குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சொல்லுக்கு ஏற்ப நல்ல மாணவர்களாகத் திகழ்ந்து இந்த அறக்கட்டளையின் பெயர் ஓங்குகின்ற வகையில் செயல்பட வேண்டும் என்று கேட்டு இந்த வெள்ளிவிழா அறக்கட்டளையைத் தொடங்கி வைத்த பெருமையை அளித்த என் ஆசானுக்கு ஆசானான திரு. அ.மு.ப. அவர்களுக்கும் இங்குள்ள அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன். வணக்கம்.