பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

உதவும் பான்மையும் போற்றக் கூடியன. அவர்களுக்கும் நன்றி.

மற்றும் பல பெரியவர்கள் - தொடர்பு உள்ளவர்கள் தொடர்பு இல்லாதவர்கள் எனப் பலப்பலர் இக்கல்வி அறம் வளர உதவினர். அறத்துக்கு வேண்டிய இடங்களை யெல்லாம் அரசாங்கம் வீட்டுவசதி மூலம் வழங்கியது. தாமே வந்து வலிய பொருள் உதவி செய்த நல்லன்பர்களும் உளர். அனைவருக்கும் என் நன்றி.

இன்று இந்நூல் வெள்ளிவிழாச் சொற்பொழிவுகளைத் தாங்கி வெளிவருகிறது. இவ்விழாவில் பங்கேற்று எங்களை வாழ்த்தி வளம் பெற நல்லாசி தந்த சான்றோர்க்கும் ஆன்றோர்க்கும் என் நன்றி உரித்தாகும்,

இச்சொற்பொழிவுகளையெல்லாம் நாடாவில் பதிவு செய்து, அவைகளை ஏட்டில் வடித்து, அச்சிடத் தந்து அவற்றில் வரும் பிழைகளைத் திருத்தி, புகைப் படங்களை ஒழுங்கு பெற அச்சிட்டு, இந்த இனிய நூலை நம் கைகளில் தவழ விட்ட என் அருமை மாணவர்- எங்கள் ஆட்சிக்குழு உறுப்பினர் பச்சையப்பர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர். சா. வளவன் அவர்களுக்கும் என் நன்றி உரித்து.

என் நினைலில் கலந்து எனக்கு உதவிய அனைவருக்கும் என் நினைவின் அப்பாலும் நின்று உதவிய பண்பாளருக்கும் நன்றி கூறி அமைகின்றேன். என் அன்னையின் அடிமலர் இறைஞ்சி இறைவன் இன்னருளைப் போற்றி வாழ்த்தி வணங்கி நிற்கின்றேன். வாழ்க நலமெலாம்! வளர்க உயிர்களின் பண்பெலாம்!


வள்ளியம்மாள் கல்வி அறம்,
தமிழ்க்கலை இல்லம் ,
சென்னை -30

அன்புடன்,
அ. மு. பரமசிவானந்தம்