பக்கம்:வெள்ளி விழா சொற்பொழிவுகள் 1993.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெள்ளி விழா

69


ஒழுக்க நெறியுடன் இருப்பார்கள் என்றுரைத்துள்ளார். ஆசிரியர் என்றால், தனித்தன்மை வாய்ந்தவராக, பெருமை மிக்க பண்டிதர் என்ற முறையில் நம்மை ஆளாக்கிக் கொண்டு வருங்கால சந்ததிகளை வழிநடத்திச் செல்ல வேண்டும். தற்போது, நமது நாட்டில் சகிப்புத் தன்மை இல்லாமல் இருந்து வருகிறது. காரணம், ஒழுக்க நெறிமுறைகளில் ஏற்படும் குறைபாடே ஆகும். ஆகவே ஒழுக்க நெறிகளை வலியுறுத்தும் நோக்கமாக இப்புத்தகத்திலே சான்றோர்களின் வாக்குகளையும், மதக்கோட்பாடுகளையும், பெரியவர்களின் சான்றுகளையும் மிக எளிய முறையில் பகுத்து, புத்தக வடிவில் வெளிக் கொண்டு வந்து, எல்லாருக்கும் பயன்படும் வகையில் தமிழ்ப் பணியாற்றியுள்ள ஐயா அவர்களை நான் மனமாரப் பாராட்டி வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். வணக்கம்.