பக்கம்:வெள்ளை யானை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33 வெள்ளை யானை

தோளில்
தட்டிக் கொடுத்தான் அவன்.

அவன் தாடி
மூக்கிலும் வாயிலும் நுழையத்
திரும்பிப் படுத்துக் கொண்டாள்
இவள்!

அன்றிலிருந்து
சுகம் கலந்த
ஒரு யானைப் பயம்
அவளைத்
துரத்திக் கொண்டிருந்தது.

அவளுக்குள்ளேயே
அடிக்கடி யானைப் பிளிறல்.

காட்டுக்குள்
யானைக் காலடியில்
சுள்ளிகள் முறியும் சத்தம்.

வானத்தில்
வெள்ளி மேகங்கள்
வெள்ளை யானைகளாக
ஊர்வலம்.

இரவில்,
கெளதமன்
நெருங்கும் போதெல்லாம்
தும்பிக்கைப் பயம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளை_யானை.pdf/23&oldid=1310347" இலிருந்து மீள்விக்கப்பட்டது