பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 கூறுகின்றன. அங்குள்ள துரண்கள் எல்லாம் இன்னிசை பாடும் துரண்களாகவே அ ைம ந் தி ரு க் கி ன் ற ன. இத்தனை பெருமையுடைய கோயில் இன்று இடிந்து சிதைந்து இருந்தாலும், அக்கோயில் கட்டிய மன்னரின் பெருமையையும் சிற்பிகளின் திறமையையும் உலகுக்கு பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன. இக்கோயில் இவ்வளவு பிரம்மாண்டமாகக் கட்டிய பின், பண்டரிபுரத்து விட்டலர் இங்குவர ம று த் து வி ட் ட ர் என்று கர்ணபரம்பரை கூறுகிறது. தனக்கு என்று அமைந்த சிறு குடிலைவிட்டுக் கிளம்பி இவ்வளவு பெரிய கோயிலுக்கு வந்து குடியேற விருப்பமில்லை போலும் அவருக்கு. ஆம். அவர் ஏழைப்பங்காளன் அல்லவா. இந்தக் கோயில் பிரகாரத்தில் இக்கோயில் வாயிலிலேயே கல் தேர் ஒன்று இருக்கிறது. இருபத்து ஐந்து அடி உயரமுள்ள இந்தக்